உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இது வரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.donets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சரியாக பதிவு செய்து தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியம்.
கடந்த சில தினங்களாக நிலவிய தபால் ஊழியரின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பரீட்சை அனுமதி அட்டை பரீட்சார்த்திகளுக்கு கிடைப்பதில் தாமதம் நிலவியதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.