நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2019 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வலயத்தின் முக்கிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இந்தியாவை மையமாக கொண்டு வலய ரீதியில் சிவில் விமான சேவையை ஆரம்பிப்பது இந்த அபிவிருத்தி திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதனூடாக இந்தியாவின் மும்பை,ஹைதராபாத் , கொச்சின், பெங்களூர் போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 2250 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில் இதில் 300மில்லியன் ரூபா இந்திய உதவியும் அரசின் 1950 ரூபா முதலீடும் கிடைக்கவுள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, 950மீட்டர் நீள ஒடுபாதை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதனூடாக 72ஆசனங்கள் கொண்ட பொம்பாடியர் 100 ரக விமானங்களை தரையிறக்க முடியும் என போக்குவரத்து சிவில் விமானச் சேவை அமைச்சு கூறியது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் பிரதான ஓடுபாதை 1.5 மீட்டர் வரை புதிதாக நிர்மாணிக்கப்படும்.
இந்த பணி நிறைவடைந்த பின்னர் 1,800 சதுர கிலோ மீட்டர் தூர வான்பரப்பு வரை விமான பயன்பாடு நடைபெறும். இறுதிக் கட்டத்தின் கீழ் விமான ஓடுபாதை 2.3 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும். மூன்றாம் கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் A -320,A -321 ரக விமானங்களையும் பலாலி விமான நிலையத்தில் இறக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.