வல்வை நகர சபையால் கரையோரத்தை துப்பரவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2019 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகர சபையால் கரையோரத்தை துப்பரவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக இன்று காலை 08.00 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆலய அருகாமையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பொது மக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வல்வை மீன் சந்தை முதல் சிவகுரு வித்தியாசாலை வரையான கடற்கரையோரத்தை துப்பரவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இக் கரையோரத்தை துப்பரவாக்கும் பணியில் சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள், பொதுமக்கள், வல்வை நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊக்குவிப்பு மையத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்துடன் , வல்வெட்டித்துறை நகரசபையும் இணைந்து வல்வெட்டித்துறை நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்கரையோர பிரதேசத்தை துப்பரவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.