சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக் கழகமும், இரண்டாவது ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக் கழகமும் மோதியது.
போட்டிகளில் இளங்கதிர் விளையாட்டுக் கழகமும் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகமும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.
இறுதிப் போட்டி இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.