வல்வை கொத்தணி முன்பள்ளிகளின் 2015 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை கொத்தணிக்கு உட்பட்ட 8 முன்பள்ளிக்கள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டன. கொத்தணி முன்பள்ளிகளில் நெடியகாடு கணபதி படிப்பகம், மதவடி விக்னேஸ்வர படிப்பகம், ஆதிகோவில் ஆதிசக்தி முன்பள்ளி, கெருடாவில் அம்பிகை முன்பள்ளி, மானங்கனை திருமகள் முன்பள்ளி, தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி, தொண்டைமானாறு பவானி முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகள் பங்கு பற்றின.
இவ்விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக விருந்தினர்களை முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் வரவேற்பைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பாலகர்களின் பல்வேறு வகையான விளையாட்டுக்கள், வினோத உடை நிகழ்வுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பாலகர்களின் இசையும் அசைவும் (உடற்பயிற்சி) நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற பாலகர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. பாலகர்களின் விளையாட்டுப் போட்டியை கண்டு களிப்பதற்கு பாலகர்களின் பெற்றோர்கள், சிறுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: July 06, 2015 at 14:36
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.