06.10.2016 இல் கொழும்பு நெலும்பொக்குனை தாமரைத்தடாகம் அரங்கில் இலங்கை கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட “நாத நதி” இசை நடன நிகழ்வில் (National musical dance poem) சிறப்பாக தனது ஆற்றுகையினை வெளிப்படுத்தி செல்வி. இரத்தினஜோதி பிரதீபா அவர்கள் தேசிய விருதினை பெற்றுள்ளார்.
கடந்த 28.01.2017 அன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கென ஓர் கலாசார மண்டபம் புற்றளையில் கௌரவ கலாசார அமைச்சர் S.B நாவின்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.அவ்விழாவில் பிரதி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,கலாசார அதிபர் பிரதீபா சேரசிங்க, யாழ் அரச அதிபர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் பிரதீபா இரத்தினஜோதி அவர்களிற்கு அமைச்சர் S.B நாவின்ன அவர்களினால் இரத்தினஜோதி பிரதீபா அவர்களிற்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடன ஆசிரியர்களான திருமதி.சுபாசினி செபஸ்டியன், திருமதி.மாணிக்கராசா சுமனேஸ்வரி மற்றும் வல்வை மகளிர் மகா வித்தியாலய அதிபர் செல்வி ராஜயலக்சுமி சுப்பரமணிய குருக்கள் மற்றும் பருத்தித்துறை கலாசார உத்தியோகத்தர் திரு.ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் செல்வி பிரதீபா இரத்தினஜோதியின் ஆற்றுகைக்கு நெறிப்படுத்த துணையிருந்தவர்கள் ஆவார்கள்.
28.01.2017 புற்றளையில் கலாசார மண்டப திறப்பு விழாவில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நா.விக்னேஸ்வரன், வி.ஜோததிரானி (ஜக்கியராட்சியம்)
Posted Date: February 09, 2017 at 02:00
தேசியவிருதைப்பெற்று எமது ஊருக்குப்பெருமை சேர்த்துத்தந்த செல்வி
இரத்தினஜோதி பிரதீபாவுக்கு வாழ்த்துகள். மேலும் நடன ஆசிரியர்கள்
திருமதி சுபாசினி செபஸ்ரியன், திருமதி மாணிக்கராசா சுமனேஸ்வரி
மற்றும் உறுதுணையாக இருந்த அநைவர்கும் நன்றி.
இக்காலம் ஒரு பொற்காலம்..இன்னும் பல விருதுகளை வென்றெடுக்க
மாணவமாணவிகள் ஊக்குவிக்கப்படவேண்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.