இலங்கை வல்வெட்டிதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட 9 வயதுடைய செல்வி தனுஜா ஜெயக்குமார் (ஜெயா) இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பல மாவட்ட மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள இவர், கடந்த 10 ஆம் திகதி தமிழகத்தின் தலைநகர் சென்னையின் வேளச்சேரியில் இடம்பெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று இந்திய தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
குறித்த இந்தப் போட்டியில் செல்வி தனுஜா 9 வயதிற்குட்பட்டவர்களிற்கான 50 மீட்டர் Butter Fly நீச்சலில், குறித்த தூரத்தை 39 வினாடிகளில் கடந்துள்ளார்
ஏற்கனவே பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தமிழக அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வி தனுஜாவல்வெட்டித்துறை ரேவடி பகுதியை சேர்ந்த ஜெயா என்கின்ற ஜெயக்குமார் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rajkumar periyathamby (canada)
Posted Date: January 18, 2016 at 04:17
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.