வல்வெட்டித்துறையில் காணாமல் போன மூன்று மாணவர்களும் கொழும்பில் மீட்பு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2015 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்கள் கடந்த 30 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ். விஸ்ணுராஜா ( வயது 15) கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் ( வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா. சுகிர்தன் ( வயது 15) ஆகிய மூன்று சிறுவர்களே காணாமற் போயிருந்தனர்.
வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்குச் சென்று வருதாக கூறிச்சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக் கூறி உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு நேற்றுமுன்தினம் சென்ற 3 சிறுவர்கள் தங்களுக்கு வேலை தருமாறு கோரியுள்ளனர். சிறுவர்கள் மீது சந்தேகம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர் சிறுவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கத்தை சிறுவர்களிடமிருந்து பெற்று பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அத்துடன் கொம்பனித் தெரு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். சிறுவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை நேற்று இரவு அவர்களது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.