வல்வை சிவகுருவைச் சேர்ந்த மாணவனுக்கு அதியுயர் ஜனாதிபதி சாரணர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)
வல்வை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவன் செல்வன் செல்வராசா ஜனாதிபதி சாரணர் விருதை (President scout award) வென்றுள்ளார். இவருடன் பருத்தித்துறை மாவட்ட மட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் லபாஸ்கரன் மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஆதவன் ஆகிய மூவரும் ஜனாதிபதி சாரணர் விருதைப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் பருத்தித்துறையில் நடைபெற்றது.
சாரணர்களில் குருளைச் சாரணர், சாரணர் மற்றும் திரி சாரணர் என 3 பிரிவுகள் உள்ளன. இவற்றில் சாரணர் பிரிவுக்கு வழங்கப்படும் அதியுயர் விருது 'ஜனாதிபதி சாரணர் விருது' என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.