பிரபல வர்த்தகர் திரு.தாமோதரம் மணிவாசகரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்டுப்பண்ணை 2017 ஆம் ஆண்டிற்கான பண்ணையாளர் தெரிவில் முதலிடம் பெற்றுள்ளது.
இவர்களுக்கான வெற்றிக்கேடயம், சான்றிதழ் மற்றும் 15, 000 ரூபாய்க்கான காசோலை என்பன கடந்த 27.02.2018 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கப்பட்டது.
பரிசினை பண்ணையின் பராமரிப்புகுழு தலைவர் திரு.நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி அவர்கள் பெற்றிருந்தார்.
சிறந்த பண்ணையாளருக்கான விருது விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டும் சிறந்த பண்ணையாக இது தெரிவு செய்யப்பட்டு 60, 000 ரூபாவினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பண்ணை வல்வெட்டித்துறை வாவின் வீதி (ஊரணி ஆஸ்பத்திரிக்கு பின்) அமைந்துள்ளது. இங்கு காலையில் மொத்தமாகவும் , சில்லறையாகவும் ஆட்டுப் பால் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.