மானாங்கானை புதிய திருமகள் சனசமூகநிலைய வேலைகள் ஆரம்பம், கிணற்று வேலைக்கான நிதி வல்வை நலன் புரிச்சங்கம் பிரான்ஸ் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் அமைந்துள்ள திருமகள் சனசமூகநிலையம் மற்றும் திருமகள் முன்பள்ளி ஆகியவற்றுக்கு நிரந்தர புதிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைக்கும் முயற்சியில் திருமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான காணி நெடியகாட்டு மைதானத்திற்கு மேற்குப் பக்கமாக பெறப்பட்டு தற்பொழுது காணி துப்பரவாக்கப்பட்டு, சுற்று மதில் வைக்கப்பட்டுவருவதுடன், இதே பகுதியில் புதிய கிணறு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. கிணற்று வேலைக்கான நிதியினை வல்வை நலன் புரிச்சங்கம் (பிரான்ஸ்) வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.