உயிர்வரை இனித்தாய் திரைப்படம் டென்மார்க் தலைநகர் அமைந்திருக்கும் சேலன்ட் தீவு பகுதியின் கொல்பெக் நகரில் கடந்த 13.09.2014 அன்று மாலை சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் நாடக மன்றத்தினரால் திரைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள விழா ஏற்பாட்டாளர்கள், திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது பெருமளவு மக்கள் வெள்ளத்தில் காண்பிக்கப்பட்டதாகவும் இது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளதாயும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் காட்சியைப் பார்க்க வந்திருந்த வர்த்தகர்கள் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும்போது தமது ஆதரவை வழங்கத்தயார் என்று தெரிவித்துள்ளதாயும் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.