இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் 67 வீதமான இலங்கை அகதிகள்: TISS ஆய்வில் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2014 (புதன்கிழமை)
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக மும்பையைச் Tata Institute of Social Sciences (TISS) என்னும்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில் தொடர்ந்தும் இருப்பதையே விரும்புகின்றனர். சுமார் 520 குடும்பங்களில் 23 சதவீதமான குடும்பங்களே இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளன.
மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே மீண்டும் திரும்பும் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். அதிலும் 42 வீதமானோர் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் (UNHCR) அனுசரணையில் திரும்ப விரும்புகின்றனர். 4 சதவீதத்தினர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். ஏனையவர் முகாம்களுக்கு வெளியில் தங்கியுள்ளனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.