தொண்டைமானாற்றில் வரலாற்றுடன் தொடர்புடைய இரு சுவரோவியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2020 (வியாழக்கிழமை)
தொண்டைமானாற்று வரலாற்றோடும் வாழ்வோடும் தொடர்புடைய இரண்டு சுவரோவியங்கள் மேலும் வரையப்பட்டுள்ளன.
இது திரைகடல் ஓடி திரவியம் தேடிய வீரகத்திப் பிள்ளைக்கு சொந்தமான சுப்பிரமணிய புரவி எனும் பாய்மரக் கப்பலாகும். 1933 ஆம் ஆண்டு பர்மாவிலுள்ள அரிக்கன் எனும் இடத்திலிருந்து 164 றாத்தல் எடை கொண்ட 8500 அரிசி மற்றும் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் வரும் காட்சியாகும். இப் பாய்மரக் கப்பல் காரை நகரில் கட்டப்பட்டதாகும்.
மூலப் படம் - தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை வரலாற்று ஆய்வு நூல்
வரைந்தவர் = பிரதாபன் (கம்பர்மலை)
இது தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் செல்வச் சந்நிதி கோவில் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள காற்றாடியை நினைவு படுத்தும் சுவரோவியம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.