அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அனர்த்த இடர் நிலையில் மக்களை ஒருங்கிணைத்து அனர்த்தத்திலிருந்து தப்புவது தொடர்பிலும் அனர்த்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய முகாமைத்துவ செயற்ப்பாடுகள் பற்றிய ஒத்திகை நடவடிக்கையானது இன்று நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) நேற்று அறிவித்துள்ளது.
ஒத்திகை நடவடிக்கையானது நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்டங்களின் அனர்த்த சூழ்நிலைகளுக்கேற்ப அரச நிறுவனங்களாலும் அரச நிர்வாக அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் வடக்கைப் பொறுத்த மட்டில் கடல் சீற்றமும் சுனாமியுமே பேரனர்த்தமாகவுள்ள நிலையில், கடலை அண்மித்த கடல் நகரங்களான திருகோணமலையில் நிலாவெளியிலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறையிலும் முல்லைத்தீவில் புதுமாத்தாளன் ஆகிய பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடம்பெறவுள்ளது
வல்வெட்டித்துறையில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கையானது கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நடாத்தப்பட்டிருந்தது
வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டு பிரதேசத்தில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு மூலையில் அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கவென அனர்த்த முகாமைத்துவ நிலையத்திளால் எச்சரிக்கை கோபுரம் Tsunami early warning centre) ஒன்று கடந்த 2006 ம் ஆண்டளவில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.