புயலாக மாறிய தாழமுக்கம், நடா என பெயரிடப்பட்டுள்ளது, பருத்தித்துறைக்கு மேலாக நகரவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)
வங்காள விருகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Storm) மாறியுள்ளது. இப்புயலுக்கு நடா (Nada) என பெயரிடப்பட்டுள்ளது.
இன்று இரவு இலங்கை நேரம் 8.40 மணியளவில் அகலாங்கு 9.3 வடக்கு, நெட்டாங்கு 85.0 கிழக்கு என்னும் புள்ளியில் நிலை கொண்டு வடமேற்காக நகர்ந்து வருகின்றது.
குறித்த இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் சென்னைக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியை நாளை மறுதினம் கடக்கவுள்ளது.
இதனால் இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக யாழ்குடாநாட்டில் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
கீழே படத்தில் புயலின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது. இப்பாதை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறைக்கு மிக அண்மையாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.