சுமார் 4 மீட்டர் வரை நிரம்பியிருந்த தொண்டைமானாறு ஏரி, அணையின் கதவுகள் சில திறக்கப்பட்டிருந்தன
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014 (வெள்ளிக்கிழமை)
கடந்த மாத இறுதியில் பெய்திருந்த கடும் மழை காரணமாக தொண்டைமானாறு ஏரியில் தேங்கிய நீர்மட்டம், அதன் அருகில் அமைந்துள்ள தொண்டைமானாறு - அச்சுவேலி வீதியை மூடுமளவிற்கு மற்றும் குடியிருப்புக்களை முட்டுமளவிற்கும் நிரம்பியிருந்தது.
அணையில் (Sluice gate) பொருத்தப்பட்டுள்ள நீர் மட்டத்தை அளக்கும் நீர்மானியின் (Draft gauge) அளவுகளின் படி நீர் மட்டம் சுமார் 4 மீட்டர் வரை உயர்ந்திருந்தது. இதனால் அணையின் கதவுகள் சில திறந்துவிடப்பட்டிருந்தன.
கீழே படங்களில் திறந்து விடப்பட்டிருந்த அணையின் ஒரு பகுதியிலிருந்து நீர் கடலை நோக்கி வருவதையும், ஏரியின் நீர் மட்டம் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புக்களை முட்டும் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளதையும் காணலாம்.
நிரம்பியுள்ள அழகான தொண்டைமானாறு ஏரி
திறந்து விடப்பட்டுள்ள தடுப்பு அணையின் ஒரு கதவு
நீர்மானி (Draft gauge) - 4 m சிறிய வெள்ளை எழுத்தில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.