யா /தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளை மகா வித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகளை முன்னிட்டு வீதியோட்டப் போட்டி (மரதன்) 19.01.2019 காலை இடம்பெற்றது.
ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை த.ராஜ்குமார், இரண்டாம் இடத்தை சி. யுவராஜ்,மூன்றாம் இடத்தை அ. தருண்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை கா.சயிதா, இரண்டாம் இடத்தை த. தனுசியா, மூன்றாம் இடத்தை வி. சுயிந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மரதன் ஓட்டத்தைத் தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் பாடசாலை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவர்களின் பெற்றோரும் எனப்பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்திருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.