தொண்டைமனாறு நடுத்தெருவில் அமைந்திருந்த வைரவருக்கு நேர்ந்த கதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)
தொண்டைமனாற்றின் பிரதான மக்கள் குடியிருப்பான நடுத்தெருப் பகுதியில் அமைந்திருந்த சிறிய வைரவர் கோயில் ஒன்று சில நாட்கள் முன்பு அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைரவர் கோயிலானது கடந்த சுமார் 25 வருடங்களிற்கு மேலாக, நடுத்தெருவின் ஒதுக்குப் புறத்தில் பெரிய ஒரு மரத்தின் கீழ் இப்பகுதி மக்களால் ஓர் கிராமிய தெய்வமாக வழிபடப்பட்டுவந்துள்ளது.
ஆனாலும் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள குறித்த சிறிய கோயிலானது புலம்பெயர் நாடு ஒன்றில் வசிக்கும் தொண்டைமனாற்றை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரின் தனியார் காணி ஒன்றில் அமையப்பெற்றிததனால், கடந்த சில நாட்கள் முன்பு இங்கு வந்திருந்த குறித்த காணியின் சொந்தக்காரரால் கோயில் மற்றும் அதனுடன் கூடிய பாரிய மரம் ஆகியன அகற்றப்பட்டுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.