யாழில் கடந்த இரு நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக வடமராட்சி கிழக்கில் பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
உடுத்துறை, ஆழியவளை, மணற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம் ஏறப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அநேகமாக பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சில இடங்களில் வீதிகளில் நீர் தேங்கி உள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகள் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.
கிராமங்களில் கடற்கரையோரமாக காணப்படுகின்ற வாய்க்கால் ஊடாக வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளப்பாதிப்பைக் குறைக்க தொண்டைமானாறு ஏரி வான் கதவுகள் 22 ஆம்திகதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.