தொண்டைமனாறு கலைவாணி உதைபந்து, யங்கம்பன்ஸ் நேற்றைய போட்டியில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2015 (திங்கட்கிழமை)
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் யாழ் மாவட்ட ரீதியான 9 நபர் கொண்டஉதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் 2 ஆம் போட்டி நேற்று ஞாயிறுக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களை பெற்று ஆட்டத்தைச் சமநிலைபடுத்தியதை அடுத்து, போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதற்கு நடுவர் தண்ட உதையினை வழங்கியிருந்தார்.
தண்டவுதையினை யங்கம்பன்ஸ் அணி மிகவும் சரியாக பயன்படுத்தி 3-1என்றகோல் கணக்கில் வெற்றிபெற்று லீக் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
போட்டிகள் தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.