இரு மாடுகள் பூட்டிய வண்டியில் தீர்த்தோற்சவத்திற்கு தொட்டில் கந்தசாமியார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)
கெருடாவில் தொட்டில் கந்தசாமி கோயில் மற்றும் தீருவில் புட்கரணி பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது.
சுவாமிகள் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரை வந்தனர். இதனையொட்டி தொட்டில் கந்தசுவாமி இன்று தீர்த்தம் ஆடுவதற்காக 2 மாடுகள் பூட்டிய வண்டிலில் வந்திருந்தார். கீழே 2 மாடுகள் பூட்டிய வண்டிலில் சுவாமி வேம்படி மோர் மடத்தினில் தங்கி நிற்பதைக் காணலாம்.
இதே வேளை மாசிமகம் உற்சவம் இன்று வல்வையில் உள்ள பிராதான கோயில்களில் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.