அவ்வளவு எளிதில் நாம் கடந்து செல்ல கூடிய செய்தி அல்ல இது.... தினமும் பிளாஸ்டிக் குறித்து பல விழிப்புணர்வு செய்து வந்தாலும் நம் மக்களுக்கு அது குறித்து சிறிது கூட அது குறித்து கவலையே இல்லை... நாட்டை ஆளும் பெரும் அதிகாரத்தில் இருப்பவரே நாடு முழுவதும் பிளாஸ்டிக் கை தடை விதிக்க இருக்கிறேன் என பண மதிப்பிழப்பு போல அறிவிக்க ஒரு நொடி போதும் அவரோ எங்களை போல பிளாஸ்டிகை எடுத்து கொண்டு இருக்கிறார்... இது மிகப்பெரிய செயல் தான் ஆனால் அதனை செய்ய வேண்டியதை விட தடை விதிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு அதை செய்யாமல் இருப்பது தான்...
அதுவும் பசு வை தான் தெய்வமாக கொண்டாடி கொண்டு இருக்கும் நிலையில் பசுவின் வயிற்றில் இருந்து மட்டும் 52 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது என்றால் அந்த ஜீவன் பட்ட பாட்டை நினைத்தாலே மனம் கலங்குகிறது.... ஏன் நாம் நம் உடலில் ஜீரணமும் ஆகாமல் மலமாகவும் வெளியேறாமல் ஒரு இரண்டு மூன்று நாட்கள் இருந்தால் கூட வயிற்று வலியால் அவதிப்பட்டு ஒடி போய் டாக்டரை பார்த்துவிடுவோம்.... ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் தினமும் பால் கொடுத்து கொண்டு,, மேய்ந்து கொண்டு திரிந்து கொண்டு இருக்கும் இந்த ஜீவனை தான் நீங்கள் எல்லாம் கடவுளை போல பாவனை செய்து கொண்டு பூஜை செய்து வருகிறார்கள் அதற்கு இந்த படும் பாதகத்தை செய்து கொண்டே.....
அந்த மாட்டின் வயிற்றில் இருந்து வரும் பாலில் கட்டாயம் அந்த பிளாஸ்டிகின் வேதியியல் பொருட்கள் கலந்தே தான் இருக்கும்..... அதனை தான் நாம் எல்லாம் வாங்கி குடித்து கொண்டு இருக்கிறோம்
பசு மாடு மட்டுமல்ல பல உயிர்கள் இந்த கொடிய பிளாஸ்டிக் நஞ்சால் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை மாய்த்துக் கொண்டு வருகிறது வெளியே தெரியாமலே....
இங்கு நாமோ கொஞ்சம் கூட கவலைப்படாமல் இன்றளவும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி கொண்டு நடந்து செல்கிறோம்.... அதனை பயன்படுத்தி தூக்கி வீசி கொண்டு தான் இருக்கிறோம்.... நாளை உங்கள் குழந்தைகளின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிகை எடுத்தாலும் இப்படி தான் இருப்பீர்களோ சுயநலமாக....ஏன்னா மாடும் அவர்களை பொருத்தமட்டில் ஒரு குழந்தை தானே....
தயவுசெய்து பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறபடுத்துங்கள்,,,, உணவு கழிவுகளை தயவுசெய்து பிளாஸ்டிக் பைகளில் இட்டு வெளியே போடாதீர்கள் அதை அப்படியே சாப்பிட்டு விடுகிறது அதனால் தான் இந்த பின் விளைவுகளை மாடுகள் சந்திக்கின்றன...
இதனை கருத்தில் கொண்டு தான் தொடர்ந்து இயங்குகிறோம்.... வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று... அதனை தொடர்ந்து செய்தும் வருகிறோம்.....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.