புலம் பெயர்ந்து தமிழகம் திருச்சியில் வசிக்கும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இந்தியாவில் நீச்சல் போட்டிகளில் பல அசாத்திய வெற்றிகளைப் பெற்று வருகின்றார். ஆனாலும் இவரின் குடியுரிமை தொடர்பான சிக்கலால் வெளி நாடுகளில் பங்கேற்க சந்தர்ப்பங்கள் இதுவரை கை கூடவில்லை.
இது தொடர்பாக இவர்களுக்கு உதவி வரும் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பு பற்றிய குறிப்பு வருமாறு,
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர்ந்து திருச்சியில் வாழும் ஜெயக்குமார், அருள் ஜோதி தம்பதியரின் மகள் ஈழத்தமிழ் சிறுமி செல்வி.தனுஜா நீச்சல் போட்டிகளில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பல முறை முதலிடம் பிடித்த பின்னரும் பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், தமிழக அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் விளையாடவும் "அகதி" என்றும் " அயல் நாட்டவர்" என்றும் தடுக்கப்படுகிறார். இது குறித்து புலம்பெயர் தமிழர் பேரவை சார்பில் இன்று(16.04.2022) மாலை 4.00 மணியளவில் சென்னை பாரிமுனையில் செல்வி.தனுஜா மற்றும் அவரது தந்தை பங்கு பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு சிறப்பாய் நடந்து முடிந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.