வல்வையின் நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2016 (சனிக்கிழமை)
தமிழ்நாட்டில் நீச்சலில் சாதனைபுரிந்து வரும் வல்வெட்டிதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுமி தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களாக நீச்சலில் தன்னை ஈடுபடுத்தி அண்மைக் காலமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்று பலரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளார் சிறுமி தனுஜா ஜெயக்குமார்.
இந்த வகையில் இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம் ஆண்டிற்கான 'ஆழிக்குமரன் ஆனந்தன்' நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தனுஜா ஜெயக்குமார் கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் Butter Fly நீச்சல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு வினாடியில் தங்கப்பதக்க வாய்ப்பினை இழந்த தனுஜா 39 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய தேசிய அளவிலான போட்டிக்கு முன்னோடியாக நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தனுஜா பெற்றிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களையும் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 2 தங்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.