வங்காள விரிகுடாவில் நகர்ந்து வரும் வர்தா புயல் (Tropical Cyclone) காரணமாக நாட்டின் வட பகுதியில், காங்கேசன்துறை துறை தொடக்கம் திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ( Department of Meteorology) அறிவித்துள்ளது.
மேற்குறித்த கரையோரப் பகுதிகளில் தற்பொழுது உருவாகியுள்ள தீவிர மேகக்கூட்டங்கள் காரணாமாக, குறித்த பகுதிகளின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் உருவாகக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வர்தா தற்பொழுது பருத்தித்துறைக்கு வட கிழக்காக சுமார் 450 கடல் மைல்கள் தொலைவில் நிலைகொண்டு மேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது நாளை 12 ஆம் திகதி மாலை ஆந்திர மாநிலத்தின் கரையை - சென்னைக்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் கடக்கவுள்ளது. கரையை கடந்த பின்னரும், வர்தா புயல் வலுவைடைந்து தீவிர தாழமுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து தாழமுக்கமாகவும் தென் இந்தியாவின் மத்தி வரை செல்லவுள்ளது. குறிப்பிடக்கூடிய தாக்கம் உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழே படத்தில் வர்தா (Vardah) புயலின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.