ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மே மாதம் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ் அடிக்கல் நாட்டும் வைபவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர பிரதி அமைச்சர் எச்.எம எம்.ஹரீஸ் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா உட்படப் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகத்துடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்தி:
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.