கடல் விபத்து மீட்பு ஒத்திகை (SAR Drill) இன்று வல்வை கடலில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2016 (வெள்ளிக்கிழமை)
கடலில் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்களின் போது உயிர் ஆபத்தை எதிர்நோக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களின் 'தேடி காப்பாற்றும் மீட்பு ஒத்திகை' (Search and Rescue - SAR Drill) ஒன்று இன்று முற்பகல் வல்வெட்டித்துறையை ஒட்டிய பாக்கு நீரிணை கடற்பரப்பில் இடம்பெற்றது.
இன்று முற்பகல் சுமார் 11 மணியளவில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல் ஒன்றிலிருந்து பயிற்சிக்கென ஒரு கடற்படை மாலுமி இலங்கை வான் படையின் ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் வான் வழி எடுக்கப்பட்டு, பின்னர் வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் தரையிரக்கப்பட்டார். தரையிறக்கப்பட்ட மாலுமி பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படும் வரை குறித்த பயிற்சி இடம்பெற்றது.
இது போன்ற பயிற்சிகள் வேறு பல இடங்களில் இடம்பெறுகின்றபோதிலும், இப்பகுதியில் இடம்பெற்றமை இதுவே முதன் முறையாகும். சுமார் 1 1 4 5 மணி வரை இடம்பெற்ற இந்த பயிற்சியை பல பொதுமக்களும் பார்வையிட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.