டென்மார்க் நாட்டில் பாடசாலைகளுக்கான சதுரங்கப் போட்டியில் சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2016 (சனிக்கிழமை)
13 வயது இலங்கைத் தமிழ் சிறுவன் ஆதேஷ் டென்மார்க் ல் பாடசாலை சதுரங்கக் கிண்ணப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று Nordic Chess Champion , Europian Youth Chess Champion போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்..
நாடளாவிய ரீதியில் 180 இளையோர், சிறுவர் இப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆதேஷ் ஈஸ்வரலிங்கம் 2 ம் இடம் பெற்று இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் நோர்வேயில் அடுத்த வருடம் நடைபெறும் Nordic Chess Champion ற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரூமேனியாவில் 2017 ல் நடைபெறும் Europian Youth Chess Champion போட்டியிலும் கலந்து கொள்வதற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆதேஷ் சிறு வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவரின் மற்றைய 3 சகோதரர்களும் சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
ஆதேஷின் தந்தை ஈசன் யாழ் வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்தவர். தாயார் ஜெயந்தி சுதுமலை யை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.