கொழும்பில் நேற்று நடைபெற்ற SRI LANKA OPEN SHOTOKEN காரத்தே போட்டியில் (SRI LANKA OPEN SHOTOKEN KARATE CHAMPIONSHIP) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
இப்போட்டியில் 11 வயது பிரிவு ஆண்களுக்கான காட்டா போட்டியில் செல்வன் முரளி பரிதியன் மூன்றாம் இடத்தினையும், 11 வயது பிரிவு ஆண்களுக்கான குமிதே போட்டியில் செல்வன் முரளி பரிதியன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார்.
மேற்படி போட்டிகள் யாவும் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. மேற்படி மாணவர்கள் பருத்தித்துறை காரத்தே பயிற்றுவிற்பாளர் இரட்ணசோதி மாஸ்டரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வன் முரளி பரிதியன் இந்த வருடத்திற்கான தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாக்கியுள்ளார். மேலும் போட்டிகள் வரும் பெப்ரவரி நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் (கனடா) (Canada)
Posted Date: December 08, 2019 at 20:58
பரிதியனுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் வளர்ந்து வல்வையின்
பெயரை உயர்த்துக!
மற்றைய மாணவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
பயிற்றுனர் ஆசான் சோதி அண்ணாவிற்கும்
பாராட்டுக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.