இலங்கை கராத்தே சம்மேளனம் நடத்திய சிறுவர்களுக்கான இலங்கை தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 42 ஆவது தேசிய மட்ட கராத்தே போட்டிகள் நேற்றுகாலை 1 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இப்போட்டிகளில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முரளி பரிதியன், பாலேந்திரன் ஹரிஸ், மற்றும் பாலேந்திரன் வசிகரன் ஆகிய மூவர் கலந்து கொண்டனர்.
இலங்கை முழுவதிலுமிருந்து 36 சிறுவர்கள் கலந்து கொண்ட போட்டியில் 'Super 8' நபர்கள் போட்டியில் செல்வன் முரளி பரிதியன் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டிகளில் மூவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன வழங்கப்பட்டன.
போட்டியில் பங்குபற்றிய வல்வையைச் சேர்ந்த மூவரும் பருத்தித்துறை தற்காப்பு கலையகத்தின் திரு. இரட்ணசோதி அவர்களின் மாணாக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவை சேர்ந்த சதுர்தியாவிற்கு தங்கப்பதக்கம்
தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவி க.சதுர்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
மாவட்ட ரீதியில் தேர்வுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கல்விபயிலும் சதுர்தியா தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: November 14, 2017 at 08:25
வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.