சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. ஒய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறைத் தலைவர் ச.சு.சிவகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
சாதானையாளர் கெளரவிப்பைத் தொடர்ந்து கல்வி மேம்பாட்டுப் பேரவை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளில் இருந்தும் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தர பரீட்சைகளில் முதல் நிலை சித்தியெய்திய மாணவர்களும் தேசிய ரீதியில் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்த மாணவர்களும் விருந்தினர்களால் சாதனையாளர் பதக்கமும் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
உயர்தரத்தில் 3ஏ பெற்ற மாணவர்களுக்கு 3000 ரூபாவும் சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மாணவர்களுக்கு 2000 ரூபாவும் பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 1000 ரூபாவும் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு 2000 ரூபாவும் என சுமார் 175 மாணவர்களுக்கு சிவன் அறக்கட்டளையினால் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ் வேலாயுதம், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரன், கரவெட்டி பிரதேச செயலர் சிவசிறீ, வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாணம் கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.