பல வரலாற்றுச் சாதனைகளைக் கண்ட கடற்கரை வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை என வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம், இன்று ரேவடி கடற் கரையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மைய திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
சிவாஜிலிங்கம் மேலும் உரையாற்றுகையில்,
நீச்சல் வீரன் நவரத்தினசாமி, கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகியோர் பாக்கு நீரினையைக் கடந்து இந்தியக் கரையை கடந்து சாதனை, தந்தை செல்வா உட்டபட பல தமிழக அரசியல் தலைவர்களை கண்டமை, 70 களின் கிளர்ச்சியில் தென்னிலங்கை அரசியல் தலைவர்களை இந்தியாவிற்கு அனுப்பியிருந்த பெருமை, தமிழரசுக் கட்சியின் முதலாவது அரசியல் கூட்டம், தந்தை செல்வா, ஜே.ஆர்.ஜெவர்த்தன, அமிர்தலிங்கம் போன்ற பல அரசியல் தலைவர்களின் பேச்சு என மிக நீண்ட பெருமைகளைக் கொண்டது இந்த ரேவடிக் கடற்கரை என இன்று ரேவடிக் கடற்கரையில் நடைபெற்ற சுற்றுலா மைய வசதிகள் கையளிப்பு நிகழ்வில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.