எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமை, வல்வை நலன் புரிச்சங்கம் வாழ்த்த உயிர் வரை இனித்தாய்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2014 (திங்கட்கிழமை)
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த ஞாயிறு 27.07.2014 அன்றுபிரான்சின் தலைநகர் சோம்வெலிசேயில் உள்ளபுப்புளிஸ் சினிமாவில் நேற்றுசிறப்புக் காட்சியாகக் காண்பிக்கப்பட் டது.
இதுவரை இல்லாதளவுக்குபெருந்தொகையானமக்கள் நிறைவுடன் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு யாழ். மாகாண சபை உறுப்பினர் திரு. எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக பாரீஸ் மாநகர சபையின் கிளை நகரத்தின் உதவி மேயர் சேர்ஜியாமகேந்திரன் பங்கேற்க, பிரபல திரைப்படக்கலைஞர் நிர்மலா புகழ் ஏ. ரகுநாதன் உட்பட பல்வேறு கலைஞர்கள் ஒன்று கூட இரு பெரும் நிகழ்வுகளாக நடைபெற்றது.
முதலாவதாக மதியம் திரு.எம்.கேசிவாஜிலிங்கம் தலைமை தாங்க பாரீஸ் கலைஞர்கள், தடம் நிறுவன ஏற்பாட்டில் சிறப்பு விருந்துபசாரம் இடம் பெற்றது.
திரைப்படத்தின் பாடகிகளில் ஒருவரான அர்ச்சனா செல்லத்துரை , திரைப்படத்தின் நாயிகநர்வினி உட்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்தநிகழ்ச்சியில் வல்வை நலன் புரிச்சங்கம் பிரான்சில் இருந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றார்கள், அத்தருணம் திரைப்பட இயக்குனர் செல்லத்துரைக்கு வாழ்த்து மடல் வல்வை நலன் புரிச்சங்கச் சார்பில் வழங்கப்பட்டது. வல்வை நலன் புரிச்சங்கத் தலைவர் இது குறித்து உரையாற்றினார்.
அதேபோலவல்வை நேதாஜி கழகம்காட்டுவளவு மக்கள் சார்பிலும் அ.ஜீவகனால் ஒரு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.
அரங்கில் பல்வேறு திரைக்கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் பின் அங்கிருந்து திரையரங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாரீசில் திரையரங்கு இருந்த சோம்செலிசேயில்தான் அன்றய தினம் மாலை ரூவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டம் முடிடையும் தருணமாகும் பெருந்தொகையான பிரான்சிய மக்களுடன் கூடியிருந்தனர் அந்த சைக்கிளோட்ட நிகழ்ச்சி முடிவடைய திரைப்படம் ஆரம்பித்தது.
விமானங்கள் பறந்து வேடிக்கை காட்ட வாத்திய இசை முழங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க உலகமே அவதானித்துக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் அமைந்துள்ள புப்பிளிஸ் திரையரங்கு நிறைந்து விடும் அபாயம் இருந்தால் உடனடியாக பாரிய திரையரங்கு மாற்றப்பட்டது.
மிகச் சிறந்த திரைப்படமென வாழ்த்திய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் இத்திரைப்படத்தால் உழைக்கும் பணத்தில் ஒரு பங்கு தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய கல்விக்கும் உதவவேண்டுமென கோரிக்கை வைத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.