வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் முழுதாக இடிக்கப்பட்டுள்ள வீடு இன்று காலை பொதுமக்கள் சிலரால் பகுதியாக சிரமாதனம் செய்யப்பட்டது.
பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இடம்பெற்ற இந்த சிரமாதனத்தை தொடர்ந்து வீடு மஞ்சள், சிவப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பொது மக்களுடன் வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை இன்று நண்பகல் 11 மணியளவில் மீண்டும் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.