ஓர் சிறிய துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூரை உலகின் முதற்தர வர்த்தக மையங்களில் ஒன்றாக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிய சிங்கப்பூரின் முதற் பிரதமராக 31 வருடங்கள் ஆட்சி புரிந்த லீ குவான் யூ தனது 91வது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.
சிங்கப்பூர் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறுவதுக்கும், பின் மலேசியாவியாவில் இருந்து பிரிவதுக்கும் வழிசமைத்து, நவீன சிங்கப்பூரை உருவாக்கியதால் புகழப்பட்டாலும் இவரது ஆட்சிக்காலத்தில் சர்வாதிகார போக்குடன் கருத்து சுதந்திரத்தை தடை செய்து எதிர்க்கட்சிகளை நீதிமன்றினூடு தண்டித்ததன் மூலம் விமர்சனத்துக்குரியவராகவும் இருக்கின்றார்.
மண்டேலா,ஆச்சி மனோரமா,ஜோன் சீனா வரிசையில் இவரும் இறப்பதுக்கு முன்பே இணைய, சமூக வலைத்தளங்களில் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவியமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: March 23, 2015 at 23:50
oru sirantha manitharai ulakam ilanthuviddathu ivarukku emathu ithaya vanakkankal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.