15 செக்கன்கள் ஒலி எழுப்பவுள்ள கப்பல்கள் - Tribute to Seafarers
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2020 (வியாழக்கிழமை)
நாளை உலக தொழிலாளர் தினத்தன்று (Labour Day, துறைமுகங்களில் உள்ள வர்த்தக்கக் கப்பல்கள் நண்பகல் 12 மணிக்கு கப்பல்களின் விசில்கள் மூலம் 15 செக்கன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பவுள்ளன.
உலகம் பூராவும் கொரொனா வைரஸ் பரவி (Covid-19 pandemic) பல நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடுகளுக்கு தேவையானபொருட்களை கொண்டு சென்று விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிக்கப்படாத வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் கப்பல்களில் பணிபுரியும் மாலுமிகளுக்கு ஒரு விசேட சமர்ப்பணமாக (Special Tribute to Seafarers) இந்த நிகழ்வு முன்னெடுக்கப் படுகின்றது.
கடலியல் சார் சில அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு பல துறைமுகங்கள் உட்பட்ட International Trade Union (ITU), International Chamber of Shipping (ICS) பல கடலியல் சார் சில அமைப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
கொரொனா வைரஸ் பரவலை முன்னிட்டு பல நாடுகளிலும் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக மாலுமிகள் கப்பல்களில் இருந்து இறங்க முடியாமலும், ஒருவாறு இறங்கிய சிலர் நகர முடியாமலும் சிக்குண்டுள்ளனர். அத்துடன் பல துறைமுகங்கள் மாலுமிகளை ஆபத்தான மருத்துவ தேவைகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.