முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கான கருத்தரங்கு ஒன்று இன்று வல்வையில் இடம்பெற்றது.வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இன்று பிற்பகல் 3 மணிக்கு பழைய வல்வை நகரசபை மேல் மாடிக் கட்டடத்தில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் பயணிகள் சேவையில் ஈடுபடும் வல்வையில் உள்ள பெரும்பாலான முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் 'பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற ஓட்டுனர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள்' என்னும் தலைப்பின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டத்து.
கருத்தரங்கின் முடிவில், கருத்தரங்கில் கலந்து கொண்ட ஓட்டுனர்கள் அனைவருக்கும் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டது.
கருத்தரங்கு மாலை 5 மணிவரை நீடித்தது.
குறித்த கருத்தரங்கு சம்பந்தமான அறிவிப்பு வல்வை நகராட்சி மன்றத்தினால் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.