உலகில் உள்ள சமுத்திரங்களின் நீர் மட்டம் கடந்த 2800 வருடங்களுடன் ஒப்பிடுமிடத்து தற்பொழுது வேகமாக உயர்ந்து வருவதாக ஒரு பல்கலைக் கழக (Rutgers University) ஆய்வு தெரிவித்துள்ளது.
1900 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 14 சென்டிமீட்டர்கள் உயர்ந்துள்ளதாகவும், பூமி வெப்பம் அடைதல் (global warming) தவிர்க்கப்பட்டிருந்தால் இந்த அளவு மிகக் குறைவாக இருந்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் கடல் மட்டம் 50 முதல் 130 சென்டிமீட்டர் வரை உயரும் எனவும் குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.