பாய் மரங்களின் பாய்களை வடிவமைப்பதில் வல்வெட்டிதுறையில் சிறந்தவராகக் கருதப்படும் திரு. சிவனடியார் நவரத்தினம் இன்று அதிகாலை அகால மரணமானார். நேற்றைய இந்திர வசந்த விழாவின் போது வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, விழா முடிந்த பின்னர் இன்று அதிகாலை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
59 வயதான இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் 2 ஆண் பிள்ளைகள் உண்டு.
இவரின் முன்னோர்கள் வழியாக பாய்மரக் கப்பல்களில் பாய் மரங்களை வடிவமைப்பதில் வல்வையில் தற்பொழுது சிறந்து விளங்கும் இவர், கடந்த வருடம் எம்மால் வடிவமைக்கப்பட்ட அன்னபூரணி மாதிரிக் கப்பல், நாகர் கோயில் வல்வை நாயகி என்பவற்றுக்கு பாய்களை வடிவமைத்திருந்தார்.
அனைவருடன் சாந்தமாக பழங்கும் சுபாவம் கொண்ட திரு.கட்டி நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதும் தற்போதைய நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.கட்டி எமது அன்னபூரணி மாதிரிக்கப்பலுக்கான பாய் வடிவமைத்தலில் ஈடுபட்ட போது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (Canada)
Posted Date: May 05, 2015 at 22:35
மிகவும் அதிர்சியான கவலையான செய்தி, கட்டிஅண்ணா அவர்களுக்கு எமது இதய வணக்கங்கள் அவரது உயிர் அமைதியடையட்டும் ஆறுதலடையட்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினருக்கு எமது ஆறுதல்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.