ஒரு கைபேசியை வைத்து ஒளிப்பதிவு செய்து ,ஒருகுறும்படம் தயாரிக்க முடியுமா? அப்படி தயாரித்தாலும் பின்னணி இசை படத்தொகுப்பு எப்படி சாத்தியமாகும்! என்று பலரது கேள்வி அத்தனையும் முடியுமென முடித்து வெளியான ஓவியம்தான் சிதம்ஸ் கலைக்கூடத்தின் "எங்க வந்து யார்கிட்ட " வெளியான முதல் நாளிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களின் பாராட்டுதளை தாண்டி இன்றும் சிறப்பாக பல ஆயிரம் பகிர்வுகளை கடந்து பயணிக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: January 27, 2018 at 17:13
நீங்கள் ஒரு கைத்தொலைபேசியில்தான் இந்தப்படத்தை எடுத்தோம் எனச்சொல்லியிருக்காவிட்டால் இந்தப்படத்தை பார்க்கும் அணைவருமே ஏதோவொரு தரமான ஒளி, ஒலி அமைப்பு வசதிகளுடன் கூடிய வீடியோ கமராவினாலேயே இந்தப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக நினைத்திருப்பார்கள்.
அந்தளவுக்கு இந்தப்படத்தின் ஒளி ஒலி அமைப்பு என இரண்டுமே மிகநேர்த்தியாக உள்ளது..
.
மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒரு திகில்படம் போலிருந்தாலும் உண்மையிலேயே இது ஒரு நல்ல நகைச்சுவைப்படம்.
.
இனிமேல் எமது இளைஞர்கள் கடைநடத்தும்போது தவறுதலாக ஏதாவது MONEY SHORTAGE வந்தால் கவலைப்பட தேவையில்லை. கடையை கொள்ளையடிக்க வருபவர்களே தாம் தப்பியோடும்போது தமது MONEY PURSE தவறவிட்டுவிட்டு எமது கதாநாயகர்களின் MONEY SHOTEAGE பிரச்சனையை SHORT OUT பண்னிவிட்டுப்போவார்கள்.
.
தனது நெஞ்சுக்குநேரே துப்பாக்கியை நீட்டி மிரட்டும்போது M.G.Rரைப்போல் சற்றும் கலங்காமல் நின்ற எமது கதாநாயகன் தனது கையிலுள்ள மிளகாய்த்தூளை தவறுதலாக மணந்து அந்த வேதனையினால் தும்மும்போதும் எதோ கொள்ளைக்காரனால் தான் சுடப்பட்டதைப்போல் பயந்து துள்ளுவது நகைச்சுவையின் சிகரம்.
.
தன்னிடம் கொள்ளையடிக்க வந்தவனை ஏதோ தனது திருமணவீட்டிற்கு வந்தவனை வழியனுப்பிவைப்பதுபோல் வாசல்வரை சென்று காரில்ஏற்றி வழியனுப்பிவைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இந்த ஒரு கட்டத்தைத்தவிர படம்முழுவதுமே மிகஅருமையாக அமைந்துள்ளது.
.
ஒரு அருமையான நகைச்சுவைப்படத்தை தந்த சிதம்ஸ் கலைக்கூடத்தினருக்கு மிக்கநன்றி.
.
உங்களிடமிருந்து மேலும் இதுபோன்ற அருமையான ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.