இந்தியாவில் இருந்து வந்தவர் யாழ் வைத்தியசாலையில் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2020 (வெள்ளிக்கிழமை)
இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்த நிலையில் யாழ் சிறைச் சாலைக்குள் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த செவ்வாய்க் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த சத்திய மூர்த்தி பால கிருஷ்ணன் என்னும் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக வட கடல் பகுதிக்குள் வந்த 4 ஈழ அகதிகள் 4 பேர் யாழ் சிறைச் சாலையில் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டு இருந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் அன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுநீரக செயல் இழப்புக் காரணமாகவே அவர் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.