பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் சாத்திய வள ஆய்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித் துறையை மீள்கட்டி எழுப்புவதற்கான கருத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கியானது வட மாகாணத்திற்கான நிலைபேறான மீன்பிடித்துறை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தியின் 62 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் அமுல்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறைத் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் பருத்தித்துறை துறைமுகம் பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியவள ஆய்வுகள் பின்வருமாறு
பருத்தித்துறை துறைமுக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு உகந்த நிலை பேறான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் உத்தேச திட்டமானது அத்துரைமுகத்தின் படுக்கையை 12 கெக்டயர்களாகவும் 5 மீட்டர் ஆழம் கொண்டதாகவும் அமைப்பதுடன் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளின் செயற்பாடுகளை வசதிப் படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. இது ‘டிக்கோவிற்ற’ மீன்பிடித் துறைமுகத்தினை ஒத்த வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும். இதன் உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூபா 6 பில்லியன்களாகும்.
இது அலைதாங்கி (Break water), கப்பற்துறை சுவர் (Pier Wall), ஏலம் விடப்படும் அறை (Auction hall), குளிரூட்டும் அறைகள் (Cool Rooms), ஆழமாக்கும் வசதிகள் (Dredging facilities) மற்றும் படகுகள் திருத்தும் வசதிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக காணப்படும்.
பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடக் கூடிய படகுகள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதை இது வசதிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பருத்தித்துறை துறைமுகம் பற்றி நாம் முன்னர் பிரசுரித்த ஆய்வுக் கட்டுரை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.