மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு வல்வையை சேர்ந்த ரசிகரன், தர்சிகா தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2014 (சனிக்கிழமை)
மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்றது. இம் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.
பெண்களுக்கான முப்பாய்ச்சல் மற்றும் தடைதாண்டல் போட்டியில் செல்வி பு.தர்சிகா முதலாம் இடத்தைப் பெற்று, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தல், 100M ஓட்டம் மற்றும் முப்பாய்ச்சல் போட்டியில் செல்வன் ஞா.ரசிகரன் 2ஆம் இடம், 3ஆம் இடங்களைப் பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களும் பங்குபற்றியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.