மழையின் மத்தியில் கடலுக்குள் நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)
தமிழகத்தில் இடம்பெற்று வந்த தமிழர்களின் கலாச்சார வீரம் நிறைந்த விளையாடுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு (ஏறு தழுவுதல்) இந்திய உயர் நீதிமன்றம் தடை வழங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் இளைஞர்களால் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று பிற்பகல் சுமார் 4 மணியளவில் வல்வெட்டித்துறையில் மழைக்கு மத்தியில் கடலுக்குள் நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி இளைஞர்கள் ஏற்பாட்டில் தம்பன் துஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் M.k.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
வல்வெட்டித்துறை சந்தியில் ஆரம்பமான இந்த ஆதரவு பேரணி ரேவடி உல்லாச கடற்கரையை அடைந்து பின்னர் வல்வை கடலில் இறங்கி கொட்டும் மழையிலும் இளைஞர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.