தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2019 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா கடந்த 12.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அதிபர் திரு இரா சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு திரு யோகசாமி ரவீந்திரன் (வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாள) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விருந்தினர்களை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டு, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவர்களின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கலைநிகழ்வுகளின் வரிசையில் சிறார்களின் நடன நிகழ்வுகளும், பேச்சு என பல்வேறுபட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் விருதுகள் என்பன வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழா நிகழ்வின் சில படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.