தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் தொடர் சொற்பொழிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரதி வெள்ளிக்கிழைமை தோறும் நடைபெற்றுவரும் ஆன்மீக நிகழ்வுகளின் வரிசையில், நாளைய தினம் வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 10 00 மணியளவில் "தேவிபாகவதம்" என்ற தொடர் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.
யாழ். வடமராச்சியில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமான தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக நிகழ்வுகள், அடியார்களுக்கு அன்னதானம் வழங்கல் மற்றும் இலவச மருத்துவ சேவைகளை வழங்கல் போன்ற சேவைகளை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினர் ஆற்றி வருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.