வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு இன்று காலை பொதுமக்கள் சிலரால் சிரமாதனம் செய்யப்பட்டது.
பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இடம்பெற்ற இந்த சிரமாதனம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி வீடு மஞ்சள், சிவப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் மீண்டும் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக சாதாரண உடையில் உள்ள பிரபாகரனின் படங்கள் அவரின்வீட்டின் முன்னால் ஒட்டப்பட்டு மரம் நடுகை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வெடிகள் கொளுத்தப்பட்டு கேக் வெட்டப்பட்டு இனிப்புக்கள் பரிமாறப்பட்டன.
நிகழ்வுகள் மழைக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பொது மக்களுடன் வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.