வல்வை ஒன்றியம் - வல்வெட்டித்துறை ஊடாக திரு. இளையதம்பி தெய்வேந்திரன் (குட்டி அண்ணா- இங்கிலாந்து) அவர்களால் பூரணம் முதியோர் உதவித்திட்டம் என்ற முதியோர் நலவாழ்வுத்திட்டம் 19.07.2010 அன்று வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை 30 முதியவர்களிற்கு மாதாந்தம் தலா ரூபா 1,000.00 (ஆயிரம்) உம், அம்முதியவர்களில் எவரிற்கேனும் மரணம் சம்பவித்தால் மரணசகாய கொடுப்பனவாக ரூபா 10,000.00 (பத்தாயிரம்) (இன்று வரை 22 மரண சகாயக் கொடுப்பனவு) உம் திரு.தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினரால் தொடர்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது இவ் உதவித்திட்டமானது வல்வை நெடியகாடு கணபதி மஹால் வலிந்துதவு சமூகசேவை அபிவிருத்திக் குழுவின் ஊடாக திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.