தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயிலின் நடந்து முடிந்த வருடாந்த மகோற்சவத்தைத் தொடர்ந்து, இன்று இரவு பூக்காரர் திருவிழா (பூத்தொண்டர் பூசை) நடைபெற்றது. இன்று இரவு சுமார் 8 மணியளவில் சிறப்புப் பூஜைகளுடன் ஆரம்பித்த சமய நிகழ்வு இரவு 10 மணியளவில் நிறைவெய்தியது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் மட்டும் நிகழும் இத்திருவிழா கடந்த மகோற்சவ காலங்களில் ஆலயத்தில் பணிவிடை செய்திருந்த சகல பூத்தொண்டர்களுக்காகவும், விளக்கு எடுத்தல் எனும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த சகல சிறுமிகளுக்காகவும் நடைபெற்று வருவது வழக்கமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.